search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    நன்னிலம் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    நன்னிலம்:

    நன்னிலம் அடுத்துள்ள பா. திருமாளம் பண்டார வாடை நோக்கர் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி கிருத்திகா (வயது 29). இவர் பேரளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். 

    இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த கிருத்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    இமு குறித்து கிருத்திகா சகோதரர் கிருஷ்ணமூர்த்தி நன்னிலம் துணை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஏழு மாதங்களில் கிருத்திகா தற்கொலை செய்ததால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×