search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை
    X
    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

    2024-ல் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை பேச்சு

    திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2024-ல் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்றுவதை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் தெற்கு வீதியில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தின் கலாசாரத்தை மாற்றுவதற்கான முயற்சியுடன் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2 சாதனைகளை செய்து வருகிறது. அதில் ஒன்று மத்திய அரசின் திட்டங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவது. 

    மற்றொன்று ஊரின் பெயரை மாற்றுவது. திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்குத்தான் இந்த வியாதி வரும். பிரதமர் நரேந்திரமோடி ஒரு ஆண்டுக்கு ரூ.44 லட்சம் கோடி பட்ஜெட் போடுகின்றவர். ஆனால் ஒரு திட்டத்துக்கு கூட அவர் தனது பெயரை வைத்தது இல்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மலை பகுதியில் சாலை இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோன்று பல இடங்கள் உள்ளதால் அங்கு சாலை வசதியை செய்து கொடுத்து அந்த சாலைக்கு கருணாநிதி பெயரை வைக்கலாம். 

    திருவாரூர் தெற்கு வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்படாத அளவுக்கு பா.ஜனதா முற்றுகை போராட்டம் நடத்தும். இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக வீடு கட்டும் திட்ட பணிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் வீட்டுக்கு அண்ணாமலை நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
    Next Story
    ×