search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பழனி கோவிலில் 6-ந் தேதி வைகாசி விசாக கொடியேற்றம்

    பழனி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில ஒன்று வைகாசி விசாகம். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் ஜூன் மாதம் 6ம் தேதி தொடங்க உள்ளது, அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமி சப்பரம், தந்தப்பல்லாக்கு, தோளுக்கினியாள், தங்கக்குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜூன் 11ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தனுர் லக்னத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 12ம் தேதி மாலை 4.15 மணிக்கு நடைபெறுகிறது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகியம்மன் கோவிலில் பக்திச் சொற்பொழிவு, பரத நாட்டிய, பக்தி இன்னிசை, வீணை இன்னிசை, நாட்டுப்புறப்பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    முன்னதாக வரும் மே மாதம் 18ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தர் விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×