search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற செவிலியர்கள்.
    X
    விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற செவிலியர்கள்.

    செவிலியர் தின விழிப்புணர்வு பேரணி

    நாமக்கல் அண்ணா சிலை முன்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவ பணியாளர் செவிலியர்கள் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் மும்தாஜ் தொடங்கி வைத்தார்.
    நாமக்கல்:

    ஆண்டு தோறும் மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்  பிறந்த நாளான மே 12-ந் தேதி செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இதனையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

    நாமக்கல் அண்ணா சிலை முன்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவ பணியாளர்  செவிலியர்கள் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் மும்தாஜ் தொடங்கி வைத்தார். 

    இப்பேரணி  பரமத்தி சாலை,  செலம்ப கவுண்டர் பூங்கா,  உழவர் சந்தை வழியாக பூங்கா சாலையை அடைந்தது. 

    பேரணியில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். பேரணி நிறைவடைந்த பூங்கா சாலையில் மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சேவையை பற்றியும், அதே போல செவிலியர் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
    Next Story
    ×