என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லஞ்சம் கொடுத்து உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Byமாலை மலர்13 May 2022 6:44 AM GMT (Updated: 13 May 2022 6:44 AM GMT)
உயிரிழந்த மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரிடம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நலன் காக்கும் திட்டமான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமானது மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசின் அதிகாரிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் நிதி வழங்க தமிழக அரசின் அதிகாரி கேட்டு வாங்கிய லஞ்சத்தால் ஓர் உயிர் பலியாகியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.
உயிரிழந்த மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரிடம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டமோ, மாநில அரசு திட்டமோ – மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தும் போது நேர்மையை கடைப்பிடிப்பதோடு, காலதாமதமின்றி அத்திட்டம் மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அரசின் கடமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நலன் காக்கும் திட்டமான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமானது மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசின் அதிகாரிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் நிதி வழங்க தமிழக அரசின் அதிகாரி கேட்டு வாங்கிய லஞ்சத்தால் ஓர் உயிர் பலியாகியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.
உயிரிழந்த மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரிடம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டமோ, மாநில அரசு திட்டமோ – மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தும் போது நேர்மையை கடைப்பிடிப்பதோடு, காலதாமதமின்றி அத்திட்டம் மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அரசின் கடமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X