search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

    மழைகாலங்களில் செம்மறியாடுகளுக்கு நீல நாக்கு நோயால் பாதிப்பு உண்டாகும்.
    உடுமலை:

    செம்மறி ஆடுகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:-

    மழைகாலங்களில் செம்மறியாடுகளுக்கு நீல நாக்கு நோயால் பாதிப்பு உண்டாகும். ரியோ விரிடேகுடும்பத்தைச் சார்ந்த பூச்சிகள், குயூலிகாய்டஸ் இனத்தைச்சேர்ந்த கொசுக்களால் இந்நோய் ஏற்படுகிறது.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஆடுகள் சோர்ந்து, தீவனம் எடுக்காமல் காணப்படும். அப்போது நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளில் இருந்து தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும். கால்நடை டாக்டரை அணுகி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த முற்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×