search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    குழித்துறை அருகே கள்ளக்காதலியின் மகளை கற்பழித்த வாலிபர் கைது

    குழித்துறை அருகே கள்ளக்காதலியின் மகளை கற்பழித்த வழக்கில் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    குழித்துறை:

    சுருளகோடு காயக்கரையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு அவரது மாமா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை வட்டம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அந்த பெண் நாகர்கோவிலைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை 2-வதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2வது கணவரையும் பிரிந்த அந்த பெண் தக்கலை அடுத்த மணலிகரை பகுதியை சேர்ந்த சுனில் ஜோய் (36) என்பவருடன் காட்டாத்துறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    அந்தப் பெண் துணிக்கடையில் வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றபோது சுனில் ஜோய் வீட்டில் இருந்தார். வீட்டில் அவரது 11 வயது பெண் குழந்தை இருந்தது. 11 வயது பெண் குழந்தையிடம் சுனில் ஜோய் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இச்சம்பவத்தை வெளியில் கூறினால் உன்னையும் உன் அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார். நடந்த சம்பவம் குறித்து பாட்டி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சுனில்ஜோய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சுனில்ஜோய் நேற்றிரவு சொந்த ஊரான மணலி கரைக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நள்ளிரவில் பதுங்கியிருந்த போலீசார் சுனில் ஜோயை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
    Next Story
    ×