என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை
தென்மேற்கு பருவமழை காரணமாக பிரசித்தி பெற்ற குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். வழக்கமாக மே மாதம் இறுதியில் பருவக்காற்று வீசத்தொடங்கும்.
ஆனால் இந்தாண்டு முன்னதாக தென்காசி மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், இலஞ்சி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் 2 நாட்களாக மலைப்பகுதிகள் மட்டுமின்றி ஊர்ப்பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக தென்காசியில் 4.40 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணைப்பகுதியில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் மெயினருவி உள்ளிட்ட பிரதான அருவிகளில் தணணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.
தற்போது பல மாவட்டங்களில் கத்திரி வெயில் வாட்டி வருகிறது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் அதற்கு மாறாக குளுகுளு சீதோஷனநிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக இதே நிலை காணப்படுகிறது. எனவே இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்