search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் தேரோட்டம்

    சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
    சுரண்டை:

    சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் வீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

     சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அழகு பார்வதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பழனி நாடார்  எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேர்  வடம்  பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருத்தணி கோவில் வளாகத்தில் இருந்து தேர் புறப்பட்டு கோட்டை தெரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வழியாக சுரண்டை நகராட்சி அலுவலகம் அருகில் வந்து  அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்திற்கு வந்தது.

    விழா ஏற்பாடுகளை அனைத்து சமுதாய விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×