என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓடும் மின்சார ரெயிலில் சிக்க முயன்ற பயணியை மீட்ட ரெயில்வே போலீசார்
Byமாலை மலர்12 May 2022 3:07 AM GMT (Updated: 12 May 2022 3:07 AM GMT)
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஓடும் மின்சார ரெயிலில் சிக்க முயன்ற பயணியை ரெயில்வே போலீசார் காப்பாற்றி உள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் பாஷா (வயது 54). இவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது மின்சார ரெயில் புறப்பட்டதால் பதற்றமடைந்த அவர், ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மீனம்பாக்கம் செல்வதற்காக பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே போலீசார் அனுஷா, சுமேஷ் ஆகியோர் இதை பார்த்ததும் உடனே சுதாரித்துக்கொண்டு பாஷாவை நடைமேடை பக்கமாக தள்ளி விட்டு காப்பாற்றி உள்ளனர்.
மின்சார ரெயிலில் ஏற முயன்று விபத்தில் சிக்க இருந்த பயணியை ரெயில்வே போலீசார் சுதாரித்து கொண்டு பிளாட்பார்ம் நோக்கி தள்ளி அவரை காப்பாற்றிய சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் பயணியின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் பாஷா (வயது 54). இவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது மின்சார ரெயில் புறப்பட்டதால் பதற்றமடைந்த அவர், ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மீனம்பாக்கம் செல்வதற்காக பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே போலீசார் அனுஷா, சுமேஷ் ஆகியோர் இதை பார்த்ததும் உடனே சுதாரித்துக்கொண்டு பாஷாவை நடைமேடை பக்கமாக தள்ளி விட்டு காப்பாற்றி உள்ளனர்.
மின்சார ரெயிலில் ஏற முயன்று விபத்தில் சிக்க இருந்த பயணியை ரெயில்வே போலீசார் சுதாரித்து கொண்டு பிளாட்பார்ம் நோக்கி தள்ளி அவரை காப்பாற்றிய சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் பயணியின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X