search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

    தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம் காடம்பாடி நம்பியார் நகரை சேர்ந்தவர் அகத்தியன் (வயது 24). 

    அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (22).
    இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு  தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில்  கல்லூரி பேராசிரியை கோமதியை தாக்கி 10 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்
    .
    இது தொடர்பாக தஞ்சை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
    இந்நிலையில்  இருவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில்  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார். 

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவு படி அகத்தியன், பிரகாஷ்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×