search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீதாகல்யாண வைபோக விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    சீதாகல்யாண வைபோக விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

    பாண்டமங்கலத்தில் ராமநவமி விழாவை முன்னிட்டு சீதா கல்யாண வைபோக விழா

    பாண்டமங்கலத்தில் ராமநவமி விழாவை முன்னிட்டு சீதா கல்யாண வைபோக விழா நடந்தது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள ‌‌‌கன்னிகா பரமேஸ்வரி ‌‌‌‌‌‌கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு சீதா கல்யாண வைபோக விழா நடைபெற்றது. 

    சீதா கல்யாண வைபோகம் விழாவை முன்னிட்டு ராமர் - சீதா லட்சுமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ராமர்‌, சீதையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமர்- சீதா லட்சுமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×