search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஆத்தூரில் பெண்ணிடம் பணம் பறித்த 4 கொள்ளையர்கள் கைது

    ஆத்தூரில் பெண்ணிடம் பணம் பறித்த 4 கொள்ளையர்கள் போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதிக்குட்பட்ட சாத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சேகர். 

    பணம் பறிப்பு இவரது மனைவி மங்கையர்கரசி. இவர் புன்னகை என்ற மகளிர் குழுவை நடத்தி வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் பிரதிநிதியாகவும் இருந்து வருகின்றனர். 

    இந்நிலையில் கடந்த 22 -ம் தேதிஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் மகளிர் குழுவின் பணத்தை வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயித்தை எடுத்துக்கொண்டு மங்கையர்கரசி, செல்வி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். 

    அப்போது மகளிர் காவல் நிலையம் அருகே மர்ம நபர்கள் மங்கையர்க்கரசி முதுகில்ரசாயன பவுடரை தூவினர். அதனை துடைப்பதற்காக அருகில் உள்ள தேனீர் கடையில் தண்ணீர் வாங்கி சுத்தம் செய்ய முயன்றபோது பணம் வைத்திருந்த பையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். 

    4 பேர் கைது இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் மங்கையர்க்கரசி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
     
    தொடர்ந்து காமராஜர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் மேட்டுப்பாளையம் பகுதியில் ரூ.6 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள்தான் ஆத்தூரில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்ணிடமிருந்து பணம் கொள்ளையடித்தது  தெரிந்தது.

    இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஷிமோகா வசித்து வந்த ஸ்ரீனிவாஸ் (வயது36), சங்கர் (30),  நந்துவினோத் (18), அஜய் பாபு (32) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்து பறிமுதல் செய்து மகளிர் சுய உதவிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×