என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு கல்லூரியில் அன்னையர் தினம்
Byமாலை மலர்11 May 2022 10:07 AM GMT (Updated: 11 May 2022 10:07 AM GMT)
அரசு கல்லூரியில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி:
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையின் வின்னேயஸ் மாணவர் கிளப் சார்பாக அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒருங்கிணை ப்பாளர் தாவரவியல் உதவிப் பேராசிரியர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார்.
பேராசிரியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அரசு கல்லூரி மாணவி களுக்கான, இலவச மகளிர் ஆரோக்கிய நலன் பரி சோதனை மற்றும் கருத்தரங்கம் நடை பெற்றது.
கருத்தரங்கில் கலந்து கொண்ட மகப்பேறு மற்றும் கருத்தரித்தல் மையத்தின் தலைமை மருத்துவர் அகிலா திருஞானம், மாணவிகளுக்கு துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் கல்லூரியில் பல்வேறு துறையின் சார்பில் சுமார் 300 மேற்பட்ட மாணவிகள் மற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
வர்ஷினி மதியழகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மணிகண்டன் மற்றும் ஹெல்த்கேர் தனியார் நிறுவனத்தின் நிர்வா கத்தினர் பங்கு கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் முதுகலை இரண்டா மாண்டு மாணவி கீதாஞ்சலி அனைவருக்கும் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X