என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அஞ்சல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்11 May 2022 9:41 AM GMT (Updated: 11 May 2022 9:41 AM GMT)
மருத்துவத்துறையை அரசே ஏற்று நடத்த கோரி பாளையில் இன்று அஞ்சல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் சார்பில் பாளையில் உள்ள தலைமை தபால் நிலைய பொருள் கிடங்கு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சண்முகசுந்தர ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதில் நெல்லை மாவட்ட,மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவ துறையை அரசே ஏற்று நடத்த வேண்டும், அல்லது தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும், 2014-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு படிவம் 14 பெறாமல் இறப்பு சான்றிதழ் மட்டும் பெற்றுக்கொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் சார்பில் பாளையில் உள்ள தலைமை தபால் நிலைய பொருள் கிடங்கு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சண்முகசுந்தர ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதில் நெல்லை மாவட்ட,மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவ துறையை அரசே ஏற்று நடத்த வேண்டும், அல்லது தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும், 2014-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு படிவம் 14 பெறாமல் இறப்பு சான்றிதழ் மட்டும் பெற்றுக்கொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X