search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    அஞ்சல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

    மருத்துவத்துறையை அரசே ஏற்று நடத்த கோரி பாளையில் இன்று அஞ்சல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நெல்லை:

    அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் சார்பில் பாளையில் உள்ள தலைமை தபால் நிலைய பொருள் கிடங்கு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சண்முகசுந்தர ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    இதில் நெல்லை மாவட்ட,மத்திய,  மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவ துறையை அரசே ஏற்று நடத்த வேண்டும், அல்லது தனியார் மருத்துவமனைகளை  கட்டுப்படுத்த தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும், 2014-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.


    ஓய்வூதியர்களுக்கு படிவம் 14 பெறாமல் இறப்பு சான்றிதழ் மட்டும் பெற்றுக்கொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
    Next Story
    ×