என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அஞ்சூர் வைரம்மன் கோவிலில் பொங்கல் விழா
Byமாலை மலர்11 May 2022 9:28 AM GMT (Updated: 11 May 2022 9:28 AM GMT)
கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முககவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு சமூக இடைவெளியுடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
முத்தூர் அருகே உள்ள அஞ்சூர் வைரம்மன், கன்னிமார் கருப்பணசாமி கோவிலில் சித்திரை மாத பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் வைரம்மன், கன்னிமார் கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், காவிரி தீர்த்தம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.
முடிவில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முககவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு சமூக இடைவெளியுடன் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் வைர குலத்தவர்கள், பக்தர்கள், சுற்றுவட்டார கிராம பகுதி பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X