search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண வைப்பு நிதி வழங்கப்பட்டது.
    X
    திருமண வைப்பு நிதி வழங்கப்பட்டது.

    பூவங்காபறம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - பொங்காலை வழிபாடு

    பூவங்காபறம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - பொங்காலை வழிபாடு நடந்தது.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம், பூவங்காபறம்பு அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபி ஷேகம் மற்றும் பொங்காலை  வழிபாடு நடைபெற்ற விழாவில் வள்ளலார் பேரவை மாநிலத் தலைவர் சுவாமி பத்மேந்திரா குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்கள்.

    பொங்காலை வழிபாட்டில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கான திருமண வைப்பு நிதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் தக்கலை டி.எஸ்.பி. கணேசன் ஆகியோர் வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சி. சோமன், ஆறுமுகம் பிள்ளை, ஊர்த்தலைவர் சிவதாணுபிள்ளை, செயலாளர்  நாககுமார், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில ஏராளமான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்கள்.
    Next Story
    ×