என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய போலீஸ்காரர்
Byமாலை மலர்11 May 2022 6:21 AM GMT (Updated: 11 May 2022 6:21 AM GMT)
இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸ்காரர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குனியமுத்தூர்:
கோவைப்புதூரை சேர்ந்த 26 வயது இளம்பெண்.
இவர் கோவை குனியமுத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் அழகுகலை நிபுணராக வேலை பார்த்து வருகிறேன். இந்தநிலையில் எனது கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நான் அவரை பிரிந்து சென்றேன். பின்னர் திருப்பூரில் தங்கி இருந்து அழகுகலை தொழில் செய்து வந்தேன்.
அப்போது எனக்கு கோவைபுதூர் சிறப்பு அதிரடிப்படை பிரிவில் பணியாற்றும் 32 வயது போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் திருப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து ஒன்றாக தங்கி இருந்தோம். அப்போது அவர் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் அவருடன் ஜாலியாக இருந்தேன்.
பின்னர் நாங்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குளத்துப்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தோம். அப்போது தான் அவர் ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னிடம் பழகியது தெரிய வந்தது.
இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது எங்களுக்குள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் என்னை தாக்கி விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றேன். மயங்கிய நிலையில் இருந்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீஸ்காரர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவைப்புதூரை சேர்ந்த 26 வயது இளம்பெண்.
இவர் கோவை குனியமுத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் அழகுகலை நிபுணராக வேலை பார்த்து வருகிறேன். இந்தநிலையில் எனது கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நான் அவரை பிரிந்து சென்றேன். பின்னர் திருப்பூரில் தங்கி இருந்து அழகுகலை தொழில் செய்து வந்தேன்.
அப்போது எனக்கு கோவைபுதூர் சிறப்பு அதிரடிப்படை பிரிவில் பணியாற்றும் 32 வயது போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் திருப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து ஒன்றாக தங்கி இருந்தோம். அப்போது அவர் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் அவருடன் ஜாலியாக இருந்தேன்.
பின்னர் நாங்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குளத்துப்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தோம். அப்போது தான் அவர் ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னிடம் பழகியது தெரிய வந்தது.
இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது எங்களுக்குள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் என்னை தாக்கி விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றேன். மயங்கிய நிலையில் இருந்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீஸ்காரர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X