search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பரமத்தி அகதி முகாமைச் சேர்ந்தவருக்கு பீர் பாட்டில் குத்து

    பரமத்தி அகதி முகாமைச் சேர்ந்தவருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் சாலமன்ராஜா.  இவரது மகன் ஜுட்(வயது36) பெயிண்டர். 

    இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரி–டம் குடும்ப செல–விற்காக ரூ. 1 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. விஜயனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் ஜுட் கொடுத்து வந்துள்ளார். 

    விஜயன் வட்டியையும், அசலையும் சேர்த்து தரு–மாறு கேட்டுள்ளார். ஆனால் வட்டியை மட்டுமே கொடுத்து வந்ததால் ஜுட்டிற்கும், விஜயனுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் பரமத்தி டாஸ்மாக் பாரில் ஜுட் மது அருந்திக் கொண்டிருந்த  போது அங்கு வந்த விஜயன் பணத்தை கேட்டுள்ளார்.

    இதில்  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு–உள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயன் பீர் பாட்டிலை உடைத்து ஜுட்டின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்து ஜுட்டை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சேர்த்த–னர். இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜயனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×