search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    வலங்கைமானில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்க கோரியும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எவ்வித பிடித்தமும் இல்லாமல் இணைத்துக்கொள்ள கோரியும், அரசு ஆணைப்படி மாத இறுதி நாளில் ஓய்வு ஊதியம் வழங்க கோரியும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×