search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் பல்வேறு வேடமணிந்தும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக அம்மன் கோவிலுக்கு வந்த போது எடுத்தபடம்.
    X
    பக்தர்கள் பல்வேறு வேடமணிந்தும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக அம்மன் கோவிலுக்கு வந்த போது எடுத்தபடம்.

    திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா-இன்று இரவு சப்பரத்தில் அம்பாள் பவனி

    திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இன்று இரவு சப்பரத்தில் அம்பாள் பவனி வருதல் நடைபெறுகிறது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 8-ந்தேதி இரவு மாக்காப்பு அலங்கார தீபாராதனையுடன் தொடங்கியது.

    நேற்று இரவு சந்தன லேபன அலங்காரம் நடைபெற்றது. கொடை விழாவின் சிகர நிகழ்ச்சி யான இன்று காலை 8 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் இருந்து   முத்தாரம்மனுக்கு தீர்த்தம், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    காலை 11 மணி அளவில் முத்தாரம்மன்  கோவிலிலிருந்து   உச்சினிமாகாளியம்மன் மற்றும்   வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு தட்டுபிரசாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து வெயிலுகந்தம்மன் கோவிலில் இருந்து தாடாத்தி அம்மன் எழுந்தருளி வீதி உலாவும் வந்தது.அதன்பின்னர் படையல் கஞ்சி தீபாராதனையாகி, முத்தாரம்மன் கோவில் சேர்ந்தது.

    அதன்பின் அம்மனுக்கு அலங்கார, தீபாராதனையாகிறது.  இரவு வெள்ளி அங்கி சாத்தி, சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    கொடை விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதி குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏராளமானவர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு தெய்வங்கள் வேடமணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தினர் மற்றும் சைவ வேளாளர் இளைஞர் பேரவையினரும் செய்துள்ளனர்.
    Next Story
    ×