என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் தே.மு.தி.க. சார்பில் கிரிக்கெட் போட்டி
Byமாலை மலர்10 May 2022 9:21 AM GMT (Updated: 10 May 2022 9:21 AM GMT)
தூத்துக்குடியில் தே.மு.தி.க. சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் ஆலோசனையின்பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. மற்றும் பிரையண்ட் நகர் ராமர் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டிக்கு மாவட்ட துணைச்செயலாளர் வி.வி.வி.ஏ.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மொத்தம் 32அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.10ஆயிரம் மற்றும் கோப்பையை மாவட்ட துணை செயலாளர் வி.வி.வி.ஏ.ராமகிருஷ்ணன் வழங்கினார்.
2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.7ஆயிரம் மற்றும் கோப்பையை தொழில்அதிபர் பாஸ்கரன் வழங்கினார். 3-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.5ஆயிரம் மற்றும் கோப்பையை ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் மாரி வழங்கினார். மேன் ஆப் தி மேட்ச் வென்ற அணிக்கு மாவட்ட மீனவரணி செயலாளர் முனியசாமி பரிசு வழங்கினார்.
இதில் நிர்வாகிகள் ராஜா முஹம்மது, சின்னதுரை, மீளவிட்டான் பகுதி துணை செயலாளர் சின்னதுரை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் ஆலோசனையின்பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. மற்றும் பிரையண்ட் நகர் ராமர் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டிக்கு மாவட்ட துணைச்செயலாளர் வி.வி.வி.ஏ.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மொத்தம் 32அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.10ஆயிரம் மற்றும் கோப்பையை மாவட்ட துணை செயலாளர் வி.வி.வி.ஏ.ராமகிருஷ்ணன் வழங்கினார்.
2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.7ஆயிரம் மற்றும் கோப்பையை தொழில்அதிபர் பாஸ்கரன் வழங்கினார். 3-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.5ஆயிரம் மற்றும் கோப்பையை ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் மாரி வழங்கினார். மேன் ஆப் தி மேட்ச் வென்ற அணிக்கு மாவட்ட மீனவரணி செயலாளர் முனியசாமி பரிசு வழங்கினார்.
இதில் நிர்வாகிகள் ராஜா முஹம்மது, சின்னதுரை, மீளவிட்டான் பகுதி துணை செயலாளர் சின்னதுரை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X