search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சூறைக்காற்றுடன் கன மழை

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.  

    குறிப்பாக எடப்பாடி, சங்ககிரி, கரியகோவில் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால்  சாலைகளில் தண்ணீர்     பெருக்கெடுத்து  ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில்  மரங்கள் முறிந்து  விழுந்தன. 

    கோடை காலத்தில் பெய்யும் இந்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக   இருக்கும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    மாவட்டத்தில் அதிக   பட்சமாக எடப்பாடியில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. சங்ககிரி 9.4, கரியகோவில் 8, மேட்டூர் 7.4 மி.மீ என மாவட்டம் முழுவதும் 44.8 மி.மீ. மழை பெய்துள்ளது.  

    இன்றும்  மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 
    Next Story
    ×