search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசிய காட்சி.

    நெல்லையில் 16-ந்தேதி சிலை திறப்பு விழா- காங்கிரசார் ஆலோசனை

    நெல்லையில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் சிலை திறப்பு விழா தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
    நெல்லை:-

    நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர், இந்திரா காந்தி முழு உருவ வெண்கல சிலை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது.


    இதற்கான கால்கோள் விழா மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடை பெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

    முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். 


    கூட்டத்தில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் சிலை திறப்பு விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஆலடி சங்கரய்யா, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன்,  தனசிங் பாண்டியன், பொதுச்செயலாளர் பாக்கிய குமார், துணைத்தலைவர்கள் வெள்ளைப்பாண்டி, உதயகுமார், சிவன் பெருமாள், வண்ணை சுப்பிரமணியன், 

    கவிபாண்டியன், சிலை அமைப்புக்குழு பொருளாளர் டியூக் துரைராஜ், மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணன், மணி, மண்டல தலைவர்கள் மாரியப்பன், ரசூல், முகமது அனஸ்ராஜா, அய்யப்பன், ராஜா, சகுந்தலா, சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×