search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு  காட்சி.
    X
    சாத்தான்குளம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு காட்சி.

    சாத்தான்குளம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு

    சாத்தான்குளம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சாத்தான்குளம்:-

     சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளகுறிச்சி பஞ்சாயத்து பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பிரவீன் நாயர் நேரில் சென்று ஆய்வு செய்தார். 


    ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து  பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். திட்டப்பணிகள் குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

     மேலும் ஆய்வின்போது செயற்பொறியாளர் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனர், உதவி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், உதவி பொறியாளர்கள் அருணா ப்ரதாயினி, கீதா மற்றும் ஒன்றிய மேற்பார்வையாளர், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×