search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
    X
    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

    திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு- முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வாழ்த்து

    ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ஓராண்டு நிறைவையொட்டி அமைச்சர்களுக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    உங்களது ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் வளம் மற்றும் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன். வெற்றியின் பாதையில் பல உயரங்களை எட்டி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டும்.

    நல்ல உடல்நலத்துடன் மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்ற எனது வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படியுங்கள்.. சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    Next Story
    ×