என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இன்னுயிர் காக்கும் திட்டத்தை அறிந்து மக்கள் பயன்பெற வேண்டும்
Byமாலை மலர்7 May 2022 10:24 AM GMT (Updated: 7 May 2022 10:24 AM GMT)
இன்னுயிர் காக்கும் திட்டத்தை அறிந்து மக்கள் பயன்பெற வேண்டும் என தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க இன்னுயிர் காக்கும் திட்டம், நம்மை காக்கும் -48 என்ற சீரிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட 6 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 19 தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காக்க மேற்கொள்ளப்படும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக ரூ.1 லட்சம் வரை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர் 4 மணி நேரத்திற்குள் நோயாளி அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் அவசரத் தகவல் எண் பெறப்பட வேண்டும்.
அதன்பிறகு 7 மணி நேரத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் புகைப்படம் உள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அதனை பெற்றபின் ஆஸ்பத்திரி நிர்வாகம் நோயாளிக்கு சிகிச்சை அளித்ததற்கான உரிய கட்டணத்திற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சமர்ப்பித்து சிகிச்சைக்கான தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர் கட்டணம் ஏதுமின்றி அவர்களது உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க அரசு உருவாக்கியுள்ள இந்த திட்டத்தை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X