என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடங்குளம் அருகே வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்7 May 2022 10:04 AM GMT (Updated: 7 May 2022 10:04 AM GMT)
கூடங்குளம் அருகே பவித்ரன் என்ற வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு விக்ணேஷ்(27), பவித்ரன்(25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
அவர்கள் 2 பேரும் பணி நிமித்தமாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி மேலூரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான இடம் விஜயாபதியில் உள்ளது. அங்கு வீடு கட்ட வேண்டும் என்று பவித்ரன்(25) கூறி வந்துள்ளார்.
இதற்காக அங்கு தற்காலிகமாக குடில் அமைத்து அவர் மட்டும் தனியாக தங்கி வந்துள்ளார். அங்கிருந்து வெல்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது செல்போனுக்கு பெற்றோர் போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விக்ணேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே விக்ணேஷ் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பவித்ரன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று பவித்ரன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X