search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் கலந்து கொண்டவர்கள்.
    X
    விழாவில் கலந்து கொண்டவர்கள்.

    தருமபுரி அரசு ஊழியர் சங்க அமைப்பு தினவிழா

    தருமபுரி அரசு ஊழியர் சங்க அமைப்பு தினவிழா நடைபெற்றது.
    தருமபுரி,

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 39 -ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்றுவிழா தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    தமிழக அரசு ஊழியர் நலன்களை  பாதுகாக்க, சமூக பார்வையுடன் சமரசமற்று போராட க்கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான முன்னணி ஊழியர்களின்   உணர்வுகளுக்கு மதிப்பளித்து 1984 மே 6 ஆம் நாள் மதுரை மாநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உதயமானது.

    அன்று முதல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய், விடி வெள்ளியாய் திகழ்வது தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழக அரசு ஊழியர்களை அணி திரட்டி  போராடி வெற்றி கண்ட ஒரே அமைப்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம், இச்சங்கத்தின்‌ 39 ம் ஆண்டு அமைப்பு தின விழா தருமபுரி மாவட்ட  கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர் தலைமை வகித்தார். மாநிலதுணைத்தலைவர் கோ.பழணியம்மாள் மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி மாவட்ட இணைசெயலாளர் ஆர்.ஜெயவேல்,மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர்.முன்னதாக அகில இந்திய அரசு ஊழியர் சம்மேள கொடியை மாநில துணைத்தலைவர்கோ.பழணியம்மாள் ஏற்றி வைத்தார்.

     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ஏற்றி வத்தார். பின்னர் பொதும்க்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    Next Story
    ×