என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும்-உடன்குடி மாநாட்டில் தீர்மானம்
Byமாலை மலர்7 May 2022 10:01 AM GMT (Updated: 7 May 2022 10:01 AM GMT)
ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என உடன்குடியில் நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர்தின மாநாடு உடன்குடியில் நடந்தது. பேரவையின் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
வியாபாரிகள் சங்க தலைவர்கள் செந்தமிழ்செல்வன் (ஆறுமுக–நேரி), தமிழரசன் (ஆத்தூர்), அருணாச்சலம் (முக்காணி), கணேசன் (திருச்செந்தூர்), லிங்கம் (பரமன்குறிச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் வரவேற்றார்.
சிறு, நடுத்தர வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன்வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும், வியாபாரிகள் பன்னாட்டு நிறுவன பொருட்கள் விற்பதைத் தவிர்த்து உள்ளூர் தயாரிப்பு பொருட்களை விற்க வேண்டும், வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை காலதாமதமின்றி வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் துரைசிங், லட்சுமணன், வேல்ராஜன், மகேஷ்ராஜன், சேகர், வீரமணி, அப்துல்லத்தீப், மதன், ஷேக் முகம்மது, மாரியப்பன், இக்பால் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டனர். உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர்தின மாநாடு உடன்குடியில் நடந்தது. பேரவையின் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
வியாபாரிகள் சங்க தலைவர்கள் செந்தமிழ்செல்வன் (ஆறுமுக–நேரி), தமிழரசன் (ஆத்தூர்), அருணாச்சலம் (முக்காணி), கணேசன் (திருச்செந்தூர்), லிங்கம் (பரமன்குறிச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் வரவேற்றார்.
சிறு, நடுத்தர வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன்வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும், வியாபாரிகள் பன்னாட்டு நிறுவன பொருட்கள் விற்பதைத் தவிர்த்து உள்ளூர் தயாரிப்பு பொருட்களை விற்க வேண்டும், வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை காலதாமதமின்றி வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் துரைசிங், லட்சுமணன், வேல்ராஜன், மகேஷ்ராஜன், சேகர், வீரமணி, அப்துல்லத்தீப், மதன், ஷேக் முகம்மது, மாரியப்பன், இக்பால் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டனர். உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X