search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பெரியபுரம் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.
    X
    உடன்குடி பெரியபுரம் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.

    உடன்குடி அருகே பிரம்மசக்தி அம்மன் கோவிலில் 5008 திருவிளக்கு பூஜை

    உடன்குடி அருகே பிரம்மசக்தி அம்மன் கோவிலில் 5008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள பெரியபுரம் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் விநாயகர் பூஜை, தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    காலை 9.15க்கு விமான கலச அபிஷேகம், காலை 10 மணிக்கு மகா அபிஷேகம் தொடர்ந்து வருஷாபிஷேகம் 12 மணிக்கு சிறப்பு விசேஷ அலங்கார தீபாராதனை, மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

    நேற்று இரவு 7 மணிக்கு நாடு நலம் பெறவும், கன மழை பொழிய வேண்டி யும் 5008 பெண்கள் கலந்து கொள்ளும் மெகா திருவிளக்கு பூஜை நடந்தது.

    சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பல்வேறு வாகனத்தில் கூட்டம் கூட்டமாக குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இரவு 8.30மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, இரவு 10 மணிக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை
    கார்தீசன் தலைமையில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×