search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்றுள்ள சித்ராங்கதன் பேசிய போது எடுத்தபடம்.
    X
    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்றுள்ள சித்ராங்கதன் பேசிய போது எடுத்தபடம்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன் பொறுப்பேற்பு

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவராக சித்ராங்கதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    சாத்தான்குளம்:

    பாரதீய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சித்ராங்கதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் நேற்று தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று மாநகரிலுள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி அபிராமி மஹாலில் அறிமுக விழா நடைபெற்றது. புதிய மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கி பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    தெற்கு மாவட்டத்தில் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நான் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் எந்தவித பாகுபாடும் இன்றி அரவணைத்து கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பேன்.
    அனைத்து கிளைகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து நானே நேரடியாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தி, தெற்கு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு லட்சக்கணக்கில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடுவேன்.


    வரும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜனதா நிச்சயமாக வெற்றி பெறும். அதுமட்டுமின்றி 2026-ம் ஆண்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குரிய 3தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றிக்கனி பறித்திடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்தஅளவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்ச்ப்பணிகள் புதிய உத்வேகத்துடன் இருக்கும்.

    பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் தூத்துக்குடி வ.உ.சிதம்ப–ரனார் துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அர்ப்பணிப்பு விழாவில் பிரதமர் நேரடியாக வந்து பங்கேற்க உள்ளார். அந்த விழாவினை மிகவும் சிறப்பாக நடத்திக் காட்டுவோம். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை நாங்கள் தலைசிறந்த மாநகரமாக மாற்றி காட்டுவோம் என்றார்.

    இதில், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாநில ஓ.பி.சி.அணி செயலாளர் விவேகம்ரமேஷ், கோட்ட இணை அமைப்பு செயலாளர் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எஸ்.பி.வாரியர், வடக்கு மண்டல பொதுச்செயலாளர் செல்லப்பா,  முத்துகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் வணிகர் பிரிவு மாநில செயலாளர் உமரி சத்தியசீலன்,பா.ஜ.க. தொழில் பொருளாதார பிரிவு தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுவைதர், வழக்கறிஞர் சந்தனகுமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிரபு, சிவமுருகன் செல்வராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் போத்தீஸ் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொது செயலாளர் செந்தில், படுக்கப்பத்து சரவணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


    முன்னதாக தூத்துக்குடி தெற்குமாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் கட்சி நிர்வாகிகளுடன் புதிய மாவட்ட தலைவர் சித்ராங்கதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    Next Story
    ×