என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உரக்கட்டுப்பாடு விதிகளை மீறிய கடைகளுக்கு விற்பனைக்கு தடை
Byமாலை மலர்7 May 2022 9:51 AM GMT (Updated: 7 May 2022 9:51 AM GMT)
தருமபுரி மாவட்டத்தில் உரக்கட்டுப்பாடு விதிகளை மீறிய கடைகளுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி,
உரக்கட்டுப்பாடு விதிகளை மீறி உரம் பெற்ற தனியார் உரகடையில் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் தனியார் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்க கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நல்லம்பள்ளி வட்டாரத்தில் வேளாண் உதவி இயக்குனர் தாம்சன், மற்றும் நல்லம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன்ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்கள் கடையில் உரை இருப்பு மற்றும் கடைமுன் முறையான விலைப்பட்டியல் தகவல் பலகை வைத்து பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி உரம் பெற்ற ஒரு தனியார் உரக்கடையில் விற்பனையை அவர்கள் தடை செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் யூரியா 1300 டன், டிஏபி 878 பொட்டாஷ் 542 டன், காம்ப்ளக்ஸ் 1557 டன், எஸ்.எஸ் .பி 317 டன், உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சங்க உரக்கடைகளில் இருப்பு உள்ளது.
இதை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X