என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையோர ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்
Byமாலை மலர்7 May 2022 9:49 AM GMT (Updated: 7 May 2022 9:49 AM GMT)
திருவையாறு கடைத்தெருவில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு:
திருவையாறு கடைத்தெரு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையும் மாநில நெடுஞ்சாலையும் இணைந்து செல்லும் சாலையிலேயே அமைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு கடையின் முன்னாலும் சுமார் 5 அடி நீளம் வரையிலும் சாலையோரத்தை ஆக்கிரமித்து மேற்கூரையை நீட்டியும், விளம்பர இரும்பு ஸ்டாண்டுகளை நிறுத்தியும், கடைப் பொருட்களை அடுக்கி வைத்தும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் உருவாக்கப்படுகிறது.
சமீப காலமாக கடைகளின் ஆக்கிரமிப்புகளோடு வெளியூர் மின்விளக்கொளி விளம்பரப் பெட்டி தாங்கிய மின் ஒயர்கள் இணைக்கப்பட்ட. இரும்புக் கம்பங்கள் கடைத்தெரு முழுவதும் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
கோர்ட் உத்தரவு என்ற பெயரில் தியாகராஜர் ஆராதனை விழா மற்றும் சித்திரை சப்த ஸ்தான தேர்த்திருவிழாவை முன்னிட்டு மட்டுமே போலீசார், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை ஒருங்கிணைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைத் தெரு ஆக்கிரமிப்புகளை தற்காலிகமாக மட்டுமே அகற்றுவதற்கு உத்திரவிடுவது வழக்கமாக உள்ளது.
ஆனால் வெளியூர் மின்னொளி விளம்பர இரும்புக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டியது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துவதே இல்லை என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருவையாறு கடைத்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமி ப்புகளை நிரந்தரமாக அகற்றி, நெரிசல் இல்லாத போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X