என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேட்டூர் அருகே போக்சோவில் கைதான தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்6 May 2022 12:07 PM GMT (Updated: 6 May 2022 12:07 PM GMT)
மேட்டூர் அருகே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் மன விரக்தியில் இருந்து தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டூர்:
மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் கருப்பு ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 45). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஜனவரி மாதம் அவரது உறவினர் வீட்டு சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் விசாரணை நடத்தி பரமசிவத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் இருந்த பரமசிவம் ஜாமினில் வெளியே வந்தார்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் மன விரக்தியில் இருந்து வந்த இவர் திடீரென தென்னை மரத்திற்கு வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். மயங்கி சாய்ந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு மேட்டூர்அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X