search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோவில் கைதான தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X
    போக்சோவில் கைதான தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    மேட்டூர் அருகே போக்சோவில் கைதான தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    மேட்டூர் அருகே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் மன விரக்தியில் இருந்து தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மேட்டூர்:

    மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் கருப்பு ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 45). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஜனவரி மாதம் அவரது உறவினர் வீட்டு சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் விசாரணை நடத்தி பரமசிவத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் இருந்த பரமசிவம் ஜாமினில் வெளியே வந்தார்.

    போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் மன விரக்தியில் இருந்து வந்த இவர் திடீரென தென்னை மரத்திற்கு வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். மயங்கி சாய்ந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு மேட்டூர்அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×