search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், இனிப்பு கொடுத்தும்
    X
    திண்டுக்கல்லில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், இனிப்பு கொடுத்தும்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளில் நேரடி தேர்வு நடைபெறுவதால் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித அச்சமும் ஏற்படாத வகையில் அவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளித்து பாடங்களை நடத்தி வந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 14117 மாணவர்களும், 13244 மாணவிகளும் என மொத்தம் 27361 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக தேர்வறைகள் அமை–க்கப்பட்டு பாதுகாப்பான முறையில் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 9 மணிக்கே பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திகொண்டனர். அங்கு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் பயமின்றி தேர்வை எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர். அதனைதொடர்ந்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறி ஆரத்தி எடுத்து தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    தேர்வை கண்காணிக்க பறக்கும்படை குழுவினரும் அமைக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    வகுப்பறையில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்க மாவட்ட கல்வி அதிகாரி் மூலம் அனைத்து  பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொண்டனர்.
    Next Story
    ×