search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரால் கைது செய்யப்பட்ட தினேஷ், ஆர்.தினேஷ், முபாரக்.
    X
    போலீசாரால் கைது செய்யப்பட்ட தினேஷ், ஆர்.தினேஷ், முபாரக்.

    நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது

    தஞ்சை அருகே நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக கூறி பெண்ணை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது ெசய்தனர்.
    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள வல்லம் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக் (வயது 25). இவரது தந்தை புருணை நாட்டில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அங்கு கோயம்புத்தூர் சரவணம்பட்டியை சேர்ந்த வசந்தன் என்பவரின் மனைவி சாந்தா (42) பணியாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் புருணையில் இருந்த போது முபாரக்கிற்கும் சாந்தாவிற்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக முபாரக் எடுத்துள்ளார். பின்னர் முபாரக் வீடியோவை காட்டி சாந்தாவை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

    மேலும் சாந்தாவிடம் முபாரக் அவருடைய நண்பர்களான வல்லம் தேவாரம் நகர் தினேஷ் (30), மின்நகர் தினேஷ் (26) ஆகியோரது வங்கி கணக்கில் பணம் போடச் சொல்லி மிரட்டி உள்ளார். 

    சாந்தாவும் ரூ.40 ஆயிரத்தை முபாரக்கின் நண்பர்கள் வங்கி கணக்கில் செலுத்தினார். நெருக்கமாக உள்ள வீடியோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன், சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி சாந்தாவிடம் முபாரக் பணம் பெற்று வந்தார்.தொடர்ந்து முபாரக் கொடுத்து வந்த நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தா இது பற்றி வல்லம் போலீசில் புகார் அளித்தார். 

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் (பொ) மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக், தினேஷ், மற்றொரு தினேஷ் என 3 பேரையும் கைது செய்தார்.

    Next Story
    ×