search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் கடையின் சுவரில் துளையிடப்பட்டுள்ள காட்சி.
    X
    செல்போன் கடையின் சுவரில் துளையிடப்பட்டுள்ள காட்சி.

    புளியங்குடியில் செல்போன் கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த மர்மநபர் யார்?

    புளியங்குடியில் செல்போன் கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த மர்மநபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புளியங்குடி:

    புளியங்குடியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் புளியங்குடி பஸ் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று வணிகர்தினத்தை முன்னிட்டு கடைக்கு விடுமுறைவிடப்பட்டது.  

    இந்நிலையில் நேற்று மாலை கடை ஊழியர்கள்  கடையை திறந்து பார்த்த போது உள்ளே பொருட்கள் சிதறிக்கிடந்தன. கடையின் பக்கவாட்டுச் சுவரில் துளை இடப்பட்டிருந்தது. அங்கிருந்த  ரூ. 1  லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

    தகவலறிந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்து கடையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்வது தெரியவந்தது.

    இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவரை துளையிட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×