search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மூதாட்டியிடம் நகை திருட்டு

    மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் முசிறி பாரதி நகரைச் சேர்ந்தவர் கமலம் (வயது 68)இவரது கணவர் ஜெயராமன் லாட்ஜ் ஒன்றில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல ஜெயராமன் பணிக்கு சென்றுவிட்டார். 

    வீட்டில் கமலம் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த சூழலை பயன்படுத்தி, மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவில் வீட்டில் உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து பொருட்களை எல்லாம் கலைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். 

    பொருட்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், மூதாட்டி கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து தப்பி ஓடியுள்ளனர். 

    இது குறித்து தகவல் அறிந்த, முசிறி காவல் ஆய்வாளர் விதுன் குமார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார். 
    Next Story
    ×