என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்6 May 2022 9:04 AM GMT (Updated: 6 May 2022 9:04 AM GMT)
சேலம் அன்னதானப்பட்டியில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி பொடரங்காடு, மணியனூர் காத்தாயம்மாள் நகர் பகுதிகளில் சிலர் ரேஷன் அரிசியை திருட்டுத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சேலம் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு நடந்த சோதனையில் காத்தாயம்மாள் நகர் பகுதியில் ஒரு வீட்டில் 30 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் தொழிலாளி கண்ணன் ( வயது 41) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து ஓட்டல்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X