search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்டோஸ்கோபிக் சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சி.
    X
    எண்டோஸ்கோபிக் சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சி.

    செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மூச்சுக்குழாய் அடைப்புக்கு எண்டோஸ்கோபிக் சிகிச்சை

    செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மூச்சுக்குழாய் அடைப்புக்கு எண்டோஸ்கோபிக் சிகிச்சை.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அந்த பகுதியை சேர்ந்த 46 வயது ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தெரிவிதுள்ளார்.

    உடனே அவரை டாக்டர்கள் பரிசோதித்து உள்ளனர். 

    அப்போது அவருக்கு மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் பிரவீன்குமார், அமுதா ஆகியோர் தலைமையிலான மருத்துக்குழு எண்டாஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை செய்தது.  

    அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த நபர் எவ்வித சிரமும் இன்றி  மூச்சு விடுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியை அணுகலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×