search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் பறிப்பு
    X
    பணம் பறிப்பு

    தேவதானப்பட்டியில் வாலிபரை நிர்வாண படம் எடுத்து பணம் பறிப்பு 2 பேர்களுக்கு வலை

    தேவதானப்பட்டியில் வாலிபரை நிர்வாண படம் எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் முருகன்(27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருகிறார். அப்போது ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்த சூர்யபிரகாஷ்(21), சிந்துவம்பட்டியை சேர்ந்த ரமேஷ்(32) ஆகியோர் நைசாக அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

    மேலும் வீட்டின் உட்புறமாக தாழிட்டுக்கொண்டு கையாலும், கத்தியாலும் தாக்கி முருகனை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.17500 பணம், செல்போன், ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    முருகன் இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×