என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேவதானப்பட்டியில் வாலிபரை நிர்வாண படம் எடுத்து பணம் பறிப்பு 2 பேர்களுக்கு வலை
Byமாலை மலர்5 May 2022 9:11 AM GMT (Updated: 5 May 2022 9:11 AM GMT)
தேவதானப்பட்டியில் வாலிபரை நிர்வாண படம் எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் முருகன்(27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருகிறார். அப்போது ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்த சூர்யபிரகாஷ்(21), சிந்துவம்பட்டியை சேர்ந்த ரமேஷ்(32) ஆகியோர் நைசாக அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.
மேலும் வீட்டின் உட்புறமாக தாழிட்டுக்கொண்டு கையாலும், கத்தியாலும் தாக்கி முருகனை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.17500 பணம், செல்போன், ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
முருகன் இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X