search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜய் வசந்த்
    X
    விஜய் வசந்த்

    மக்களுக்கு சேவை செய்வதில் வியாபாரிகளுக்கு நிகர் யாரும் இல்லை- விஜய் வசந்த் எம்.பி. பெருமிதம்

    பேரிடர் காலமாக இருந்தாலும் சரி திருவிழா காலமாக இருந்தாலும் சரி அது வணிகர் இல்லாமல் ஒருகாலமும் இருக்காது என விஜய் வசந்த் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
    சென்னை:

    விஜய் வசந்த் எம்.பி. வணிகர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மக்களுக்கும் உற்பத்தியாளருக்கும் இடையே பாலமாகவும் பலமாகவும் இருந்து மக்கள் தேவையைப் பூர்த்தி செய்து வரும் எனது உறவுகளுக்கு 39-வது வணிகர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வணிகம் என்பது ஓர் சேவை, பல நஷ்டங்களைச் சகித்து மக்களுக்குத் தரமான சேவைகளைச் செய்து வரும் உங்கள் பணி தலை சிறந்தது.

    உலகிற்கு வணிகத்தைக் கற்பித்த நம் மூதாதையர்கள் அந்த காலத்தில் பண்ட மாற்றுமுறை மூலம் வணிகம் செய்தனர். தேவைப்படும் நேரத்தில் தேவையை அறிந்து மக்களுக்குச் சேவை செய்து வரும் உங்கள் பணிக்கு நிகர் ஏதும் இல்லை.

    பேரிடர் காலமாக இருந்தாலும் சரி திருவிழா காலமாக இருந்தாலும் சரி அது வணிகர் இல்லாமல் ஒருகாலமும் இருக்காது. இவ்வாறாக மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள வணிக பெருமக்களே பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்ற செயற்கை பேரிடரிலிருந்து நாம் பிறந்த பிள்ளை போல மெல்ல மெல்லத் தவழ்ந்து மீண்டும் நடக்கத் தொடங்கிய போது கொரோனா என்ற பெரும் தொற்றால் நமது வாழ்க்கையில் பல இறக்கங்களைச் சந்தித்தோம்.

    தற்போது நோய்த்தொற்று மெல்லக் குறைந்தாலும் மத்திய அரசு விதிக்கும் வரியால் நம்மில் பலர் மிதியடியாக மிதிப்பட்டு வருகிறோம். இனி வரும் நாட்களில் இந்நிலை மாறி நாட்டில் வணிகம் பெருகி வணிக சமுதாயம் மீண்டும் எழ மத்தியில் நமது காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆட்சி அமைப்போம். நாட்டை வல்லரசாக்குவோம் என உறுதி ஏற்போம். மீண்டும் எனதருமை உறவுகளுக்கு வணிகர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×