search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பல்லடம் அருகே இளம்பெண் தற்கொலை - கணவர் கைது

    அதிகாலையில் கண் விழித்த சத்தியசீலன் மனைவி தூக்குப் போட்டு தொங்குவதை கண்டு அலறி துடித்தார்.
    பல்லடம்:

     பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது28). இவருக்கும் சூலூரை சேர்ந்த ஹரிப்பிரியா(21)என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சத்தியசீலன் குடும்பத்தார் ஹரிப்பிரியா மற்றும் அவரது பெற்றோர்களை தரக்குறைவாக பேசி வந்துள்ளனர். 

    இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இது சம்பந்தமாக கணவன்-மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிப்பிரியா நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கச் சென்ற பிறகு மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
    அதிகாலையில் கண் விழித்த சத்தியசீலன் மனைவி தூக்குப் போட்டு தொங்குவதை கண்டு அலறி துடித்தார். 

    இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது .சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஹரிப்பிரியாவின் தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக சத்தியசீலனை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணமாகி இரண்டு வருடங்களே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×