என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருடசேவை புறப்பாட்டில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் வீதி உலா
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
தஞ்சை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது
தஞ்சாவூர்:
தஞ்சை மகர்நோன்பு சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 96-ம் ஆண்டு சித்திரை சிறப்பு திருவிழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு பெருமாள் கருட சேவை புறப்பாடு நடைபெற்றது. பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் 5-ந் தேதி வெண்ணைத்தாழி புறப்பாடு, 8-ந் தேதி திருக்கல்யாண வைபவம், இரவு சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 9 ஆம் தேதி வசந்த உற்சவம் இரவு புறப்பாடு, 11-ந் தேதி ராஜகோபால சுவாமி புறப்பாடு, 13-ந் தேதி அனுமந்த வாகனம் இரவு புறப்பாடு, 15-ந் தேதி குதிரை வாகனம் இரவு புறப்பாடு நடைபெற உள்ளது. 18-ந் தேதி விடையாற்றி விழாவுடன் விழா நிறைவடைய உள்ளது.
Next Story