search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடை விழாவில் நேற்று இரவு உச்சினிமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.
    X
    கொடை விழாவில் நேற்று இரவு உச்சினிமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.

    வட்டன்விளை கோவில் கொடை விழாவில் சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி-இன்று இரவு நடக்கிறது

    பரமன்குறிச்சிஅருகே வட்டன்விளை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழாவில் கிளி வாகனத்தில் சந்தனமாரியம்மன் பவனி இன்று நடக்கிறது.
    உடன்குடி:

    பரமன்குறிச்சிஅருகே வட்டன்விளை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழாவை யெட்டி இன்று இரவு சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வருகிறார்.

    இக்கோவிலில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கொடை விழா தொடங்கியது. பல்வேறு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  

    நேற்று காலை 8 மணிக்கு 108பால்குடம் ஊர்வலம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோலாட்டம், நள்ளிரவு 12 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன்சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்கருக்கு காட்சி கொடுத்தார்.

    இன்று நள்ளிரவு 12 மணிக்கு சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வருகிறார். முளைப்பாரி ஊர்வலமும் நடக்கிறது.  நாளை (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதல், கரகாட்டம், இரவு 10 மணிக்கு மாவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 12 மணிக்கு சிறப்பு ஆலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து முத்தாரம்மன் பூஞ்சப்பர பவனியை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடங்கி வைக்கிறார்.

    6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அக்னிக்குண்டம் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல், 6-ந்தேதி செங்கிடகார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருஷாபிஷேகம், 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 10 மணிக்கு வில்லிசை, 7-ந்தேதி காலை 6 மணிக்கு உணவு எடுத்தல் நடைபெறும்.ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×