என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முல்லைப் பெரியாறு அணை பொறியாளர்களுக்கு புதிய வாகனங்கள்
Byமாலை மலர்3 May 2022 4:33 AM GMT (Updated: 3 May 2022 4:33 AM GMT)
முல்லை பெரியாறு அணை பகுதி பொறியாளர்களுககு 2 புதிய பொலிரோ வாகனங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.
கம்பம்:
முல்லைப் பெரியாறு அணை பரமரிப்புக்கு கம்பத்தில் சிறப்பு கோட்ட அலுவலகம் செயல்படுகிறது. இங்கு செயற்பொறியாளர், உதவிக்கோட்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
பொறியாளர்களின் பயன்பாட்டுக்காக ஏற்கனவே 2 ஜீப் வாகனங்கள் இருந்தன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் புதிதாக 2 பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த வாகனங்களை செயற்பொறியாளர் சாம் இர்வின் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து செயற்பொறியாளர் சாம் இர்வின் கூறியதாவது, கடந்த மாதம் அணை பகுதியில் பேரிடர் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு கோட்டத்துக்கு தகவல் தொடர்புக்காக சாட்டிலைட் கைப்பேசி வழங்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் விரைந்து செல்வதற்காக 2 புதிய பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X