என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ.வின் உதவியாளரிடம் விசாரணை
Byமாலை மலர்2 May 2022 10:19 AM GMT (Updated: 2 May 2022 10:19 AM GMT)
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் இன்று விசாரணை நடைபெற்றது.
கோவை:
கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மறுவிசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தனிப்படை போலீசார் இதுவரை 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாக கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கொடநாட்டில் மர வேலைப்பாடுகள் பார்த்த சஜீவன், அவரது சகோதரர் சிபி, அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவிடம் கொடநாடு வழக்கு குறித்து சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அவர் சிறிது காலம் முன்னாள் எம்.எல்.ஏ.வான கோவையை சேர்ந்த ஆறுக்குட்டியிடம் கார் டிரைவராக வேலை பார்த்துள்ளார்.
இதனால் ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் அவரிடம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதான அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.
சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில், கனகராஜ் குறித்தும், எத்தனை நாட்கள் வேலை பார்த்தார் என்பது குறித்தும், கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு பிறகு கனகராஜ் உங்களை தொடர்பு கொண்டு பேசினாரா என்பதும் குறித்து விசாரித்தனர். அவரை தொடர்ந்து அவரது மகன், தம்பி மகனிடம் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் ஆறுக்குட்டியின் உதவியாளரான நாராயணசாமியிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை அவர் கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதான அலுவலகத்தில் தனிப்படை முன்பு ஆஜரானார்.
அவரிடம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது, அவரிடம் டிரைவராக வேலை பார்த்த கனகராஜின் செயல்பாடுகள், அவரை வேலைக்கு சேர்த்து விட்டது யார்? அவர் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறிய பின்பு அவர் உங்களை தொடர்பு கொண்டாரா? என 10க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மறுவிசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தனிப்படை போலீசார் இதுவரை 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாக கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கொடநாட்டில் மர வேலைப்பாடுகள் பார்த்த சஜீவன், அவரது சகோதரர் சிபி, அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவிடம் கொடநாடு வழக்கு குறித்து சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அவர் சிறிது காலம் முன்னாள் எம்.எல்.ஏ.வான கோவையை சேர்ந்த ஆறுக்குட்டியிடம் கார் டிரைவராக வேலை பார்த்துள்ளார்.
இதனால் ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் அவரிடம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதான அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.
சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில், கனகராஜ் குறித்தும், எத்தனை நாட்கள் வேலை பார்த்தார் என்பது குறித்தும், கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு பிறகு கனகராஜ் உங்களை தொடர்பு கொண்டு பேசினாரா என்பதும் குறித்து விசாரித்தனர். அவரை தொடர்ந்து அவரது மகன், தம்பி மகனிடம் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் ஆறுக்குட்டியின் உதவியாளரான நாராயணசாமியிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை அவர் கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதான அலுவலகத்தில் தனிப்படை முன்பு ஆஜரானார்.
அவரிடம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது, அவரிடம் டிரைவராக வேலை பார்த்த கனகராஜின் செயல்பாடுகள், அவரை வேலைக்கு சேர்த்து விட்டது யார்? அவர் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறிய பின்பு அவர் உங்களை தொடர்பு கொண்டாரா? என 10க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X