என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் மாணவர்களிடையே சமூக நல்லிணக்க விழிப்புணர்வு
Byமாலை மலர்2 May 2022 9:55 AM GMT (Updated: 2 May 2022 9:55 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறையினர் சமூக நல்லிணக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறையினர் சமூக நல்லிணக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அப்போது காவல்துறையினர் மாணவர்களிடம் இன்றைய சமுதாயத்திற்கு சமூக நல்லிணக்கம் மிக மிக அவசியமானதாகும். நாம் நம்மை சுற்றி இருப்பவர்களோடும் நம்முடன் தொடர்பில் இருப்பவர்களோடும் என்றும் ஜாதி,மத வேறுபாடுகளை பார்க்கக் கூடாது என அறிவுரை கூறினர்.
எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உயரிய சிந்தனையோடு பேசி பழக வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் தான் எதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகும் தலைவர்களாகவும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவராக வரபோகிறவர்கள் என்றும் கூறினர்.
மேலும் பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறையினர் சமூக நல்லிணக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அப்போது காவல்துறையினர் மாணவர்களிடம் இன்றைய சமுதாயத்திற்கு சமூக நல்லிணக்கம் மிக மிக அவசியமானதாகும். நாம் நம்மை சுற்றி இருப்பவர்களோடும் நம்முடன் தொடர்பில் இருப்பவர்களோடும் என்றும் ஜாதி,மத வேறுபாடுகளை பார்க்கக் கூடாது என அறிவுரை கூறினர்.
எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உயரிய சிந்தனையோடு பேசி பழக வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் தான் எதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகும் தலைவர்களாகவும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவராக வரபோகிறவர்கள் என்றும் கூறினர்.
மேலும் பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X