search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 6 ஆயிரத்து 679 தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. 

    இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன் கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இதன்படி சனிக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 6 ஆயிரத்து 679 தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். 

    இதில் 1 கிலோ தேங்காய் அதிக பட்ச விலையாக ரூ.28.15-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.23.60-க்கும், டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. 

    மேலும் 68 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிக பட்ச விலையாக ரூ.89.10-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.65.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 6 ஆயிரத்து 604 தேங்காய்கள் குறைவாகவும், 27 தேங்காய் பருப்பு மூட்டைகள் கூடுதலாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. 

    இதில் தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.1-ம், தேங்காய் பருப்பு 1 கிலோ–விற்கு ரூ.1.80-ம் கூடுதலாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது. 

    மேலும் கடந்த 1 மாத காலமாகவே தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 7 வார கால–மாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டது.

    மேலும் ஒழுங்கு முறைவிற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மூட்டைகள் 5 டன் அளவில் மொத்தம் ரூ‌.2 லட்சத்து 45 ஆயிரத்து 422-க்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது. 

    இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

    இந்த தகவலை முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×